என்னை பாதித்த, என்னை எழுத தூண்டிய, சிலவற்றை,சிலரை இங்கே எனது மழலை மொழியில் வரைந்துள்ளேன்
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
வெள்ளி, 19 அக்டோபர், 2012
அழகு!!!
ஏ புள்ள ,இங்க வா !!
"என்ன பெத்தாரு ??
சட்டு புட்டுன்னு சொல்லு
நான் போய் சுள்ளி பொறுக்கணும்
இல்லனா ஆத்தா திட்டும் "
"அடியேய் இந்தா
ரோசா பூ ,தலைல சொருகிட்டு போ "
"அய்யே இந்த ரோசா வேணாம்
காகித ரோசா தான் வேணும் "
"அட புள்ள ஊரு உலகமெல்லாம்
தான அழகுன்னு சொல்றாக "
"நீ தர்ற ரோசா பூ கிட்ட
நெறைய நிறம் இருக்கு ஆனா எனக்கு தராது
காகிதப்பூ தான் எனக்கு உதடுச்சாயம் தரும்
எனக்கு அந்த காகிதப்பூ தான் அழகு"
"என்ன பெத்தாரு ??
சட்டு புட்டுன்னு சொல்லு
நான் போய் சுள்ளி பொறுக்கணும்
இல்லனா ஆத்தா திட்டும் "
"அடியேய் இந்தா
ரோசா பூ ,தலைல சொருகிட்டு போ "
"அய்யே இந்த ரோசா வேணாம்
காகித ரோசா தான் வேணும் "
"அட புள்ள ஊரு உலகமெல்லாம்
தான அழகுன்னு சொல்றாக "
"நீ தர்ற ரோசா பூ கிட்ட
நெறைய நிறம் இருக்கு ஆனா எனக்கு தராது
காகிதப்பூ தான் எனக்கு உதடுச்சாயம் தரும்
எனக்கு அந்த காகிதப்பூ தான் அழகு"
திங்கள், 24 செப்டம்பர், 2012
மண்ணுக்குள்ளே ஒரு மனிதக் குரல் !!!!
அலையாய் வந்து கொஞ்சுகிறாய்
மலையாய் வந்து நனைகிறாய்
தென்றலாய் வீசி வருடுகிறாய்
புயலாய் வீசி கோபப்படுகிறாய்
இசையாய் பொழிந்து தாலாட்டுகிறாய்
நிலாவை ஒளிர்ந்து அழகு காட்டுகிறாய்
எனக்காக இத்தனையும் செய்த
உன்னைவிட்டு பிரிய மனமில்லை
அதனால்தான் உன் மடியிலே
ஆறு அடியிலே உறக்கம் கொள்கிறேன்!!!!
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
நீ...............................ளும் தேடல்
கதைக்குள் கதையாய்
கவிதைக்குள் காவியமாய்
புதிருக்குள் புதினமாய்
வாழ்க்கை ஓடிக்கொண்டுதானிருக்கிறது -என்
தேடலும் நீண்டு கொண்டுதானிருக்கிறது
மெல்லினம் அவள்
உன் நடையில் நளினம்
உன் இதயமோ மெல்லினம்
உன்னினத்திற்கு நீ ஒரு இலக்கணம்
நின்னை பற்றி சொல்லாம் ஆயிரம் கவிகள்
அதை கேட்க வேண்டும் நூறு புவிகள் ! !
சுய உணர்வு
இளவேனிற் காலமாய் -என்
இந்தியா சுதந்திரம்
இழந்து நின்றது ஆங்கிலேயனிடம்
இலையுதிர் காலமாய்-என்
இந்தியன் சுய உணர்வு
இழந்து நிற்கிறது அரசியல்வாதிகளிடம்
இந்தியா சுதந்திரம்
இழந்து நின்றது ஆங்கிலேயனிடம்
இலையுதிர் காலமாய்-என்
இந்தியன் சுய உணர்வு
இழந்து நிற்கிறது அரசியல்வாதிகளிடம்
கரை தொடுவாயோ
எனக்குள்ளே உன்னை அடக்கி வைக்கிறேன்
என் இதய பெட்டகத்தில் உனை அடைத்து வைக்கிறேன்
ஏன் பொங்குகிறாய் அலை கடலாய் ?
ஏன் அடங்காமல் கொட்டி தீர்க்கிறாய் அருவியாய்?
என் கவிதையே!
ஏன் கவிதையே உனை ஒன்று கேட்கிறேன்..
ஹைக்குவாக்க நினைத்தேன் கவிதையானாய்,
கவிதையாக்க முனைகின்றேன்
காவியமாவயோ இல்லை கரை தொடுவாயோ !!!!!!!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)