ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மனம் மயங்குதே !!!!

நிலவே உனை கவி பாட நினைந்தேன்
தேய்கிறாய் , வளர்கிறாய்
திடீரென  தோன்றி மறைகிறாய் !

உன்னில் பல நிறங்கள்
மஞ்சள் வெள்ளையென
விசித்திரமூட்டுகிறாய் !

உனை ரசித்து கவி எழுத அமர்ந்தேன்
ரசித்து முடிக்கு முன்
சூரிய ஜன்னல் மூடி முகம் மறைத்தாய்!

ஒரு திங்களில் நீ இல்லாத
இரு தினங்கள் -வானம் போல
என் மனமும் கருமையாய் !

சில நேரம் வான பெண்ணின் திலகமாய்
சில நேரம் நட்சத்திர தோட்டத்தில் மயக்கும் மாதுவாய்!!!!

எத்தனை அவதாரம் நீ எடுப்பாய் ?
எத்தனை தரம் என் மனம் மயக்குவாய் ?

ஏங்குகிறேன்  தினம் உனை நினைத்து!
மயங்குகிறேன்  தினம் உனை பார்த்து!

வெள்ளி, 19 அக்டோபர், 2012

அழகு!!!

ஏ புள்ள ,இங்க வா !!

"என்ன பெத்தாரு ??

சட்டு புட்டுன்னு சொல்லு

நான் போய் சுள்ளி பொறுக்கணும்

இல்லனா  ஆத்தா திட்டும் "


"அடியேய் இந்தா

 ரோசா பூ ,தலைல சொருகிட்டு போ "

"அய்யே இந்த ரோசா வேணாம்

காகித ரோசா தான் வேணும் "

"அட புள்ள ஊரு உலகமெல்லாம்

 தான அழகுன்னு சொல்றாக "

"நீ தர்ற ரோசா பூ கிட்ட

நெறைய நிறம் இருக்கு ஆனா எனக்கு தராது

காகிதப்பூ தான் எனக்கு உதடுச்சாயம் தரும்

எனக்கு அந்த காகிதப்பூ தான் அழகு"