என்னை பாதித்த, என்னை எழுத தூண்டிய, சிலவற்றை,சிலரை இங்கே எனது மழலை மொழியில் வரைந்துள்ளேன்
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
வெள்ளி, 19 அக்டோபர், 2012
அழகு!!!
ஏ புள்ள ,இங்க வா !!
"என்ன பெத்தாரு ??
சட்டு புட்டுன்னு சொல்லு
நான் போய் சுள்ளி பொறுக்கணும்
இல்லனா ஆத்தா திட்டும் "
"அடியேய் இந்தா
ரோசா பூ ,தலைல சொருகிட்டு போ "
"அய்யே இந்த ரோசா வேணாம்
காகித ரோசா தான் வேணும் "
"அட புள்ள ஊரு உலகமெல்லாம்
தான அழகுன்னு சொல்றாக "
"நீ தர்ற ரோசா பூ கிட்ட
நெறைய நிறம் இருக்கு ஆனா எனக்கு தராது
காகிதப்பூ தான் எனக்கு உதடுச்சாயம் தரும்
எனக்கு அந்த காகிதப்பூ தான் அழகு"
"என்ன பெத்தாரு ??
சட்டு புட்டுன்னு சொல்லு
நான் போய் சுள்ளி பொறுக்கணும்
இல்லனா ஆத்தா திட்டும் "
"அடியேய் இந்தா
ரோசா பூ ,தலைல சொருகிட்டு போ "
"அய்யே இந்த ரோசா வேணாம்
காகித ரோசா தான் வேணும் "
"அட புள்ள ஊரு உலகமெல்லாம்
தான அழகுன்னு சொல்றாக "
"நீ தர்ற ரோசா பூ கிட்ட
நெறைய நிறம் இருக்கு ஆனா எனக்கு தராது
காகிதப்பூ தான் எனக்கு உதடுச்சாயம் தரும்
எனக்கு அந்த காகிதப்பூ தான் அழகு"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)